Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், நவ. 5: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவசமாக தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அதன் வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெறாதவர்கள் பயிற்சி முடித்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.