Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலிக் கிழங்கு கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

பழநி, ஜூன் 19: தமாகாவின் மாநில செயலாளர் மணிக்கண்ணன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ஒட்டன்சத்திரம் பகுதியில் மார்க்கம்பட்டி, எல்லப்பட்டி, சின்னக்காம்பட்டி, வாகரை, பொருளூர் கள்ளிமந்தையம் மற்றும் பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கண்வலி கிழங்கு செடி பயிரிடப்படுகிறது. இதற்கு மேலை நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

இப்பகுதி விவசாயிகளால் டன் கணக்கில் கண்வலி கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டும் உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, மார்க்கம்பட்டி அல்லது ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைத்து, அரசே உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.