Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வீட்டில் தவறி விழுந்தவர் பலி

வடமதுரை, ஜூன் 18: வடமதுரை அருகேயுள்ள கோப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (48). இவர் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் சுந்தரி என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரபாண்டி வீட்டை விட்டு வெளியே சென்ற போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சுந்தர பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரபாண்டி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து சுந்தரி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்ஐ சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.