Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தரமற்ற முறையில் தார் சாலை அமைப்பு

திண்டுக்கல், ஆக. 4: ஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் குருசாமி தலைமையில் அவ்வமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.அதில் தெரிவித்திருந்தாவது: ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை கிராமம் கொல்லப்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை முறையாக போடாமல் தரமற்ற முறையில் பெயரளவில் மட்டுமே போடப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று உள்ளது. யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் பெயரளவில் மட்டுமே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்து தரமற்ற தார் சாலை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.