தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிமேடு அரசு பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, அக். 4: கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணிதிட்டம் சார்பில் தீவாம்பாள்பட்டினத்தில் டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் சேகல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டனர். மேலும் தீவாம்பாள்பட்டினம் மாரியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்தும் புட்களை அகற்றியும் நடைபாதை வழியை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி கல்வி மையம் ஒருங்கிணைப்பாளர் சத்யப்பிரியா கலந்து கொண்டு பணம் இல்லா பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் பேசினார்.

Advertisement

டிஜிட்டல் இந்தியா என்பது ஆன்லைன் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதையும் இணைய இணைப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் அதிவேக இணையத்தை கிடைக்க செய்தல், தொழில் செய்வதை எளிமையாக்கி நிதி பரிமாற்றங்களை செய்வது போன்ற சேவைகள் டிஜிட்டல் இந்தியா வாயிலாக கிடைக்கும். மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்த பிறகு ஸ்மார்ட்போன் பயன்பாடு, இணைய இணைப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து உள்ளன என்றார்.

கருத்தரங்க நிகழ்ச்சியில் நிதி கல்வி அறிவு மையம் ஆலோசகர் கலைமகள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சந்திரசேகரன் வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் கபீர் தாஸ் நன்றி கூறினார்.

Advertisement

Related News