தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனவிலங்கு வேட்டையாட முயன்ற தந்தை, மகனுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

அரூர், நவ.12: தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், வனப்பகுதிகளில் வேட்டைத்தடுப்பு, ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வனவர்கள் விவேகானந்தன், பவித்ரா, ஐயப்பன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்குமார், இளவரசன், வனக்காவலர் லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், மொரப்பூர் வனச்சரகம், வாதாப்பட்டி பிரிவு, செல்லம்பட்டி பீட் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது, பொய்யப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் (62), அவரது மகன் சந்திரகாந்த்(42) ஆகிய இருவரும், தங்களது பட்டா நிலத்தில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்த்து, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்தனர். அதில், மின்சாரம் பாய்ச்சி வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து மின்சாரம் பாய்க்க பயன்படுத்திய ஒயர், கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவர் மீதும் வனஉயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக, ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

Advertisement