தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிழற்கூடத்தை ஆக்கிரமித்து வைத்த தள்ளுவண்டி கடைகள்

காரிமங்கலம், நவ. 12: காரிமங்கலம் பேரூராட்சியில் ராமசாமி கோவில் பஸ் நிறுத்த பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தின் முன்புறத்தில், பானிபூரி கடை உட்பட தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன் அருகில் துணை சுகாதார நிலையம் மற்றும் சுகாதார வளாகம் உள்ள நிலையில், மேற்கண்ட பகுதிகளும் ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பலமுறை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement