Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குறைதீர் நாள் கூட்டத்தில் 524 மனுக்கள் குவிந்தன

தர்மபுரி, டிச.9: தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். இதில் பொதுமக்களிடம் இருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 524 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் ரவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அசோக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.