Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சந்து கடையில் மது விற்றவர் கைது 26 பாட்டில்கள் பறிமுதல்

பாப்பாரப்பட்டி, மே 15: பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபானத்தை பதுக்கி, 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக, பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எஸ்ஐ சேகர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஆலமரத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வந்த பிளப்ப நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.