தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் மலைப்பாதையில் பழுதான கேமராக்களை மாற்ற வலியுறுத்தல்

குன்னூர், பிப்.6: குன்னூர் மலைப்பாதையில் பொருத்தி உள்ள கேமராக்கள் பழுதாகி இயங்காமல் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 2019ல் நீலகிரி மாவட்ட போலீசார் காட்டேரி பகுதி முதல் பர்லியார் வரை 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். குன்னூர் மலைப்பாதை அடர் வனம் என்பதால் வன விலங்குகள் அடிக்கடி சாலைக்கு வரும் போது விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றன. இதைக்கண்காணிக்கும் வகையிலும், மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டால் அதை கண்காணிக்கும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் இயங்கி வந்த கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதாகின.

Advertisement

இதனால், சாலையோரம் குற்ற சம்பவங்களும், அத்துமீறல்களும் அதிகரித்து வருவதாக சுற்றுலா பயணிகள் புகார் எழுப்புகின்றனர். கல்லூரி மாணவர்கள் சிலர் பைக்கில் பெண்களை அழைத்து வந்து யானைகள் நடமாடும் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதும், சாலையோரங்களில் உள்ள தடுப்புகளின் மீது அமர்ந்து, சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சில இருசக்கர வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே, பழுதான கேமராக்களை மாற்றி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

Advertisement