தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்வேறு இடங்களில் போதையில் ரகளை 11 பேர் அதிரடி கைது

Advertisement

புதுச்சேரி, அக். 18: புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோயில் வீதி சுடுகாடு அருகே ஒரு நபர் குடிபோதையில் அவ்வழியே செல்லும் மக்களுக்கு இடையூறாக, முகம் சுளிக்கும் வகையில் அநாகரிகமாக சத்தம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், வைத்திக்குப்பத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

அதேபோல், முத்தியால்பேட்டை குருசுக்குப்பம் மெயின் ரோட்டில் கடற்கரை அருகே நள்ளிரவு போதையில் ரகளை செய்த குருசுகுப்பம் பால்ராஜ் (28), வாழைக்குளம் பாலச்சந்தர் (28), சதீஷ் (28), முத்தியால்பேட்டை அங்காளம்மன்நகர் கார்த்திக் ராஜா (28), வைத்திக்குப்பம் ராஜ்கமல் (27), கருவடிக்குப்பம் பாரதிநகர் கோகுல் (24) ஆகிய 6 பேரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று, ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்புநகர் 4வது மெயின் ரோட்டில் இரவு 10.30 மணியளவில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை குடிபோதையில் திட்டிக் கொண்டிருந்த சொக்கநாதன்பேட் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (29) என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பம் இடையான்சாவடி ரோடு பம்ப் ஹவுஸ் அருகே நள்ளிரவில் ரகளை செய்த முத்தியால்பேட்டை ராமலிங்கம் நகர் கார்த்திக் (30), லாஸ்பேட்டை இசிஆர் திருமண மஹால் அருகே நள்ளிரவு குடிபோதையில் ரகளை செய்த பெருமாள் (38) ஆகியோரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே ரகளை செய்த ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (எ) சரவணன் (50) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News