தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலை வாங்கி தருவதாக ரூ.5.60 லட்சம் மோசடி

சின்னசேலம், நவ. 15: வேலை வாங்கி தருவதாக சகோதரர்களிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் பச்சையம்மன் கோயில் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி(33). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 4.3.2015ல் கள்ளக்குறிச்சி அருகே வடக்கநந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தன்(45) என்பவர் தலைமையில் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த 2017ல் ஆனந்தன், ராஜியிடம் தனக்கு மேலிடத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், உனக்கும், உன் தம்பிக்கும் போலீஸ் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி மூன்று தவணையாக ரூ.5.50 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வேலை பற்றி கேட்டபோது கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் வேலை கிடைக்காததால் மீண்டும் ஆனந்தனிடம் வந்து கேட்டபோது காட்டுமன்னார்கோவிலில் உள்ள என் நண்பர் கருணாகரனிடம் பணம் கொடுத்துள்ளேன்.

அவரிடம் சென்று வாங்கி வரலாம் என்று கூறி மேலும் ரூ.10,000 பணம் வாங்கியதாக தெரிகிறது. அதன்பிறகும் வேலை கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த ராஜி, கடந்த 21.1.25ல் போன் மூலம் ஆனந்தனிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ஆனந்தன் அவரை அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கொலை மிரட்டல் செய்துள்ளார். இது குறித்து ராஜி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் ஆனந்தன், கருணாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து அதில் ஆனந்தனை கைது செய்தனர்.

 

Advertisement

Related News