Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக எம்எல்ஏ மீது கூட்டு பாலியல் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

தியாகதுருகம், ஜூன் 8: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கல்வராயன் மலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாங்களும் அரசின் அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து ஓரிரு வருடங்களில் கல்வராயன்மலைறை வளர்ச்சிக்குரிய இடமாக மாற்றுவோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேவை குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் பட்சத்தில் அனைத்து துறைகளுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் சரியான விளக்கம் அளித்துள்ளார். அதுவே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும் என்றார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக எம்எல்ஏ மீது கூட்டு பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தவறு யார் செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்கள்.

காவல்துறை கட்சி சார்பற்று முழு சுதந்திரத்துடன் செயல்படும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தவெக ஒரு மேயர் பதவியை கூட வெல்ல முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு இது நிர்வாக ரீதியான கூட்டம் அதிகாரிகள் இருக்கிறார்கள். அரசியல் சார்ந்த கேள்விகள் இங்கு வேண்டாம் என்று அமைச்சர் ஆதவ் கூறினார்.