தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி சைக்கிள் நிறுவன மோசடி வழக்கு கைதான பெண்ணிடம் நகை, கார் பறிமுதல்

புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரியில் போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் பலகோடி மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் பெண் ஒருவரை கைது செய்து, அவரிடம் இருந்த நகை மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ஏப்ரல் மாதம் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ரூ.2.45 கோடி பணம் இருந்தது. தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமது உள்ளிட்டோர் மீது இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால், பல கோடி மோசடி என்பதால் அமலாக்கத்துறை தாமாக முன்வந்து இவ்வழக்கில் விசாரணை நடத்தியதோடு போலி சைக்கிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிஷாத் அகமதுவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவ்வழக்கு புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்திலிருந்து, புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

பின்னர், கைது செய்யப்பட்ட நிஷாத் அகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிஷாத் அகமது தன்னை காப்பற்றிக்கொள்ள ரூ.80 லட்சம் வழக்கறிஞரிடம் கொடுத்து, சைபர் கிரைம் போலீசார் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தியை புதுச்சேரி காவல்துறை தலைமையகம் கடந்த மாதம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. இதனிடையே, சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் அம்பிகா என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் அம்பிகாவை நீதிமன்ற உத்தரவின்படி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அம்பிகா தெரிவித்து இருப்பதாகவும், அதன்படி போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மேலும், சிபிசிஐடி போலீசார் அம்பிகாவிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement