Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிப்பு

காட்டுமன்னார்கோவில், ஜூன் 9: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான ஷண்டன், எய்யலூர், ரெட்டியூர், அருண்மொழிதேவன், கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் சுமார் 5,000 ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றன. விவசாய பணிகளுக்கு தேவையான நேரத்தில் போதிய மின்சாரம் கிடைக்காத காரணத்தால் பாசன நீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பயிர்கள் காய்ந்து சேதமடையும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.