தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவை செல்வபுரத்தில் பேருந்து லக்கேஜ் கதவு மோதி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் பலி

கோவை, ஆக. 12: கோவை செல்வபுரத்தில் பஸ் லக்கேஜ் கதவு மோதி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை டவுன் ஹால் ஹாஜி முகமது வீதியை சேர்ந்தவர் உமர் நாபிக் (30). யுபிஎஸ் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு உக்கடத்தில் இருந்து செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் ஆம்னி பஸ் ஒன்று இடதுபுறம் லக்கேஜ் கதவு திறந்தவாறு சென்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சத்தமிட்டு பஸ் டிரைவரிடம் தெரிவிக்க முயற்சி செய்தனர். ஆனால் பஸ் டிரைவருக்கு கேட்கவில்லை.

அவர் தொடர்ந்து பஸ்சை இயக்கியுள்ளார். சிறிது நேரத்தில் பஸ்சின் முன்புறம் சென்று கொண்டு இருந்த உமர் நாபிக் மீது அந்த கதவு மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உமர் நாபிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உமர் நாபிக்கின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.