தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் மேக மூட்டம், சாரல் மழையால் குளிர் அதிகரிப்பு

ஊட்டி, நவ. 8: ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம், சாரல் மழை காணப்படும் நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி மழை 2 மாதங்களுக்கு பெய்தது. இந்த 2 மாதங்களும் ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டால், அவ்வப்போது மேக மூட்டம், சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

Advertisement

கடந்த 2 நாட்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று ஊட்டியில் காலை முதலே மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால், காலை, இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பள்ளி செல்லும் சிறு குழந்தைகளும் குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிகாலை நேரங்களில் மேக மூட்டம் அதிகள் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமத்திற்குள்ளாகினர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. குளிர் அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர்.

Advertisement

Related News