தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட துணை கலெக்டர் நாராயண சர்மா தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விநாயகா மிஷனின் வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது இந்திய அரசின் ``தூய்மையே சேவை’’ - ஸ்வச்தா ஹி சேவா பிரசாரத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டு நல பணித்திட்டம் அமைப்பின் மூலம், பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை இணைந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் ராட்டினக்கிணறு பகுதியில் நேற்று நடத்தியது.

இதில், துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கல்லூரி பொறுப்பு இயக்குநர் முத்துராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட துணை கலெக்டர் நாராயண சர்மா பங்கேற்று, மாணவர்களின் ``தூய்மையே சேவை’’ விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், துறை மாணவர்கள் மூலம் ``தூய்மையே சேவை’’ என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நாடகம் நடித்தும், கை கழுவும் வழிமுறைகளை நடனத்தின் மூலமும் மக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறையின் நாட்டுநல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன், ஜூவா மற்றும் சுற்றுச்சூழல் மாணவர் குழு ஒருங்கிணைப்பாளர் தீபிகா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Related News