தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா திமுக எம்எல்ஏ கோரிக்கை

Advertisement

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்றைக்கு நாட்டையே அதிர வைத்திருக்கிறது. ‘ரூ’ என்று சொன்னவுடன் ஒன்றிய அமைச்சர் அலரும் சத்தம் கேட்டு டெல்லி அதிகாரத்தையே கிடுகிடுக்க வைத்து விட்டது. இதை நாம் கண்கூடாக பார்த்தோம். நம்முடைய முதல்வர், ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. அநாவசியமாக பயப்படாதீர்கள். ‘ரூ’ என்பது ரூபாயை குறிக்கின்ற ஒரே ஒரு சொல்தான்,’ என்று சொன்ன பிறகுதான் டெல்லி இன்றைக்கு மூச்சு வாங்கி அமர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய நிதிநிலை அறிக்கையை அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 9,335 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது ஒன்றிய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும். சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறாத இடமே இல்லை. எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசு நிதி தரவில்லை. இருந்தாலும் இவ்வளவு நிதி நெருக்கடியிலும், நமது அரசால் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாம்பரம் மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயர்வு என்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்து தர வேண்டும். தாம்பரம் பெரிய ஏரி, கடப்பேரி ஏரி, எட்டித்தாங்கல் ஏரி ஆகிய ஏரிகளை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தி, விரைவில் பணிகளை துவங்க வேண்டும். தாம்பரம் தொகுதி மப்பேடு முதல் வேங்கடமங்கலம் வரை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும். தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை பகுதியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News