Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்: சோதனை அடிப்படையில் நாளை முதல் ஒருவாரம் அமல்

சென்னை, நவ.5: வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பால கட்டுமான பணி நடைபெற உள்ளதால், அப்பகுதியில் நாளை முதல் சோதனை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி காரணமாக அப்பகுதியில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:

* ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.

* மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும், ஏ.ஏ.சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.

* கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை - காந்தி ரவுண்டனா - பேசின் பாலம் - வியாசர்பாடி புதிய பாலம் - மார்க்கெட் - முத்து தெரு- மூர்த்திங்கர் தெரு - வலது எருக்கஞ்சேரி சாலை வழியாக இலக்கை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.