Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேருந்து கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

ஆலந்தூர்: பழஞ்சூர், டிஎம்ஐ கேம்பஸ்சில் தத்துவ இயல் படிக்கும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று, நேற்று பரங்கிமலையில் உள்ள தேவாலயத்திற்கு சென்றது. அங்கு, மாணவர்கள் பிரார்த்தனை செய்த பிறகு, மீண்டும் பழஞ்சூருக்கு மினி பேருந்து புறப்பட்டது. பரங்கிமலை வழியாக சென்றபோது மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் இருந்த இரும்பு தடுப்பு மீது மினி பேருந்து மோதி, கவிழ்ந்தது.

இதில், பேருந்து ஓட்டுனர் சந்தீப் பிரபாகரன், கிளீனர் செல்வகுமார் மற்றும் அமுல், கோலத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சைதாப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.