தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

சென்னை, நவ.12: செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல பிலிம் சிட்டி உள்ளது. இங்கு தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிலிம் சிட்டியில் வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் பிலிம் சிட்டி வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிலிம் சிட்டிக்குள் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டது. பலமணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement