தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணமாகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை: திருவட்டார் அருகே சோகம்

குலசேகரம், செப்.21: திருவட்டார் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவட்டார் அருகே உள்ள ராமன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இதில் மகள் நர்சிங் படித்துவிட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மகன் பிரவீன்ராஜ் (26) ஆட்டோ ஓட்டி வந்தார். பிரவீன்ராஜ் தனக்கு திருமணம் ஆகவில்லையே என ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் ஒரு அறையில் இருந்த பிரவீன்ராஜ் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவை திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பிரவீன்ராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீன்ராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருவட்டார் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பிரவீன்ராஜ் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News