Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உதயநிதி ஸ்டாலின் விடுதலை ஜெயங்கொண்டத்தில் திமுகவினர் வெடிவெடித்து கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம், ஆக.5: ஜெயங்கொண்டத்தில் உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டதை திமுகவினர் வெடிவெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக போலீசார் நேற்று காலையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

இதனை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவடைந்தவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார்.

இது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நகர திமுக சார்பில் நகர செயலாளர் வெ.கொ. கருணாநிதி தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.