Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மகளிர் பாதுகாப்பு, போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜெயங்கொண்டம், ஆக.1: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் பாதுகாப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு உடற்கல்வி இயக்குநர் அன்பரசன் வரவேற்புரை வழங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சக்திமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத்தலைவர் வடிவேலன், தமிழ்த்துறை தலைவர் பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு (SSI) சின்னதுரை, தலைமைக்காவலர் மணிகண்டன், தலைமைக் காவலர் தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினைச் சார்ந்த நிக்கோலஸ் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் பாதுகாப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு உரையாற்றினார்.

இறுதியில் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர்கள் செந்தில் மற்றும் முனைவர் முருகன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் அனைத்துத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.