Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அரியலூர் வேளாண் அலுவலர்களுக்கு அட்மா திட்டத்தின் மூலம் கேரளா மாநிலத்தில் பயிற்சி: கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது

ஜெயங்கொண்டம், ஏப். 30: அரியலூர் மாவட்டத்தில் அட்மா திட்டத்தின் மூலம் மாநில அளவிலான பயிற்சிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம், வெள்ளையானி, வேளாண்மை கல்லூரி மற்றும் ஸ்ரீகாரியம் இடத்தில் அமைந்துள்ள மத்திய கிழங்கு வகை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றனர்.

வேளாண்மை தொழில்நுட்பங்களை கல்லூரியில் உள்ள பண்ணைகளுக்கு சென்று தொழில் நுட்பங்களையும் மத்திய கிழங்கு வகை பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து வகையான கிழங்கு வகைகளை பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்பு இயல்புகளுடன் அதற்கு உண்டான தொழில் நுட்பங்களையும், பயிற்சி பெற அரியலூர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி தலைமையில் வேளாண்மை வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன்,

வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் மற்றும் கலைமணி, வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன், கலைச்செல்வி, மற்றும் சுகந்தி ,துணை வேளாண்மை அலுவலர் ராஜதுரை, வேளாண்மை உதவி அலுவலர் ராம்குமார், விற்பனை அலுவலர் கருணாகரன், ஆத்மா திட்டத்தின் வட்டார மேலாளர் செந்தில் ஆகியோர் சென்றனர். இந்த பயிற்சியானது ஐந்து நாட்கள் கொண்டதாகும்.