Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் இலக்கிய பேரவையின் முழு நிலவு கூட்டம்

பெரம்பலூர், ஜூலை 31: பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் 89ஆம் முழுநிலவுக் கூட்டம் பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு மாடியிலுள்ள 007 ஒளிப்பட நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் கவிச்சிட்டு வேல். இளங்கோ தலைமையில் நடைபெற்றது. பேரவைச் செயலாளர் ஓவியச்செம்மல் முகுந்தன் வரவேற்றார். பூவை. தமிழோவியன் பாவேந்தரின் பாடல்களைப் பாடினார். பாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வை எனும் தலைப்பில் பணிநிறைவுப் பெற்ற தலைமையாசிரியர் மலர்க்கொடி கலந்து கொண்டு பாவேந்தரின் “இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறதென்பானும் இருக்கின்றானே” என்ற குடும்ப விளக்கு நூலில் உள்ள பாடலில் தொடங்கி, எங்கள் வாழ்வும் எங்கள்வளமும், மங்காத தமிழ் என்று சங்கே முழங்கென்று முழங்கினார்.

புலவர் கோவிந்தன் அக்ரி ஆறுமுகம், கவிஞர் தேனரசன், ஆசிரியர் சிவானந்தம், முத்துசாமி வரலாற்று நூல் ஆசிரியர் ரத்தினம் ஜெயபால், பதியம் கவிஞர் சாரங்கபாணி, கவிஞர் சுனைதாபேகம் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி பேராசிரியர் மூர்த்தி, அரியலூர் அரசுக் கல்லூரி பேராசிரியர் செல்வகுமார் கவிஞர்கள் ராமர், அகவி, காப்பியன், ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாயக்கிருட்டிணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முடிவில் பெரவை இணைச் செயலாளர் சிற்றரசு நன்றி தெரிவித்தார்.