Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

அரியலூர், ஆக. 3: அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள குழந்தைத் திருமண வழக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குழந்தைத் திருமணத்தை முழுமையாகத் தடுக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள், கிராமபுறங்களில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இளம் தலைமுறையினருக்கு உடல்நலம், கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து வழங்குதல் குறித்தும், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, அவர்களுக்கு உரிய மறுவாழ்வு சேவைகள், உளவியல் ஆலோசனைகள், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குழந்தைகள் உதவி மையத்தின் 1098 என்ற அவசர உதவி எண்ணிற்கு வரும் அனைத்து புகார்கள் மற்றும் வழக்குகளுக்கும் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.