தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடையாறு மண்டல பகுதிகளில் ரூ.1.1 கோடியில் நிழற்குடை பல்நோக்கு கட்டிடங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

Advertisement

சென்னை: அடையாறு மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடங்கள் மற்றும் பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அடையாறு மண்டலம், 172வது வார்டு, கன்னிகாபுரம், வேளச்சேரி பிரதான சாலையில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்ட நிதி ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், 175வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, 3வது அவென்யூவில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம், கக்கன் நகர் 3வது குறுக்குத் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடம், கக்கன் நகர் பிரதான சாலையில் ரூ.11.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி முருகவேல், ஆனந்தம், மணிமாறன், பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement