தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவிகளின் உள்ளாடைகளை திருடும் மர்ம ஆசாமி காட்பாடியில் வைரலாகும் வீடியோ அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள

வேலூர், செப்.12: காட்பாடியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள மாணவிகளின் உள்ளாடைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச்ெசல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவ, மாணவிகள் 4 பேர், 5 பேர் என்று சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். மாணவிகள் தங்கள் ஆடைகளை துவைத்து அடுக்குமாடி குடியிருப்பில் மாடியில் உள்ள கொடியில் காய வைத்துள்ளனர்.

Advertisement

ஆனால் தொடர்ந்து மாணவிகளின் உள்ளாடைகள் மட்டும் மாயமாகி வந்தது. இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த மாணவிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அதில், இரவு மர்ம ஆசாமி ஒருவர் மாணவிகள் தங்கியிருக்கும் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே செல்கிறார். பின்னர் மாடிப்படி வழியாக மாடியில் ஏறி மாணவிகள் கொடியில் காய வைத்திருந்த உள்ளாடைகளை திருடிக்கொண்டு செல்வது தெரிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காட்பாடி போலீசார் அந்த வீடியோ காட்பாடியில் எடுக்கப்பட்ட வீடியோ தானா, மாணவிகளின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் மர்ம ஆசாமி யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News