தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே நாளில் குவிந்த ஆயிரம் நெல் மூட்டைகள் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செங்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

செங்கம், ஜன. 24: செங்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரேநாளில் ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செய்யப்பட்டது. செங்கம் தாலுகாவில் உள்ள சிறு மற்றும் பெரு விவசாயிகள் பயன்பெறும் விதமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்ததால் அதிகபடியாக நெல் மகசூல் அடைந்து அதனை பல கிராமங்களில் இருந்தும் செங்கம் பகுதியில் உள்ள தமிழக வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக நேற்று எடுத்து வந்தனர்.

Advertisement

நேற்று ஒரேநாளில் ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு நெல் மூட்டைகளை வாங்கி சென்றனர். நெல் மூட்டையின் விலை ₹1450 முதல் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெல் மூட்டை அம்மன் ஆர்என்ஆர் ரக ஏடிடி நெல் மூட்டைகளை அறுவடை செய்து மூட்டை மூட்டையாக எந்த ஒரு இடைத்தரகரின்றி தங்கு தடை இன்றி தங்களின் விலை பொருட்களை எடை குறையாமலும் விலை குறையாமலும் அதிக விலைக்கு விற்பனை செய்து எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தினசரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கும். எனவே விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

Advertisement

Related News