தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

 

Advertisement

ஈரோடு, டிச. 6: ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான சாலையின் நடுவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஈரோடு கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான தார்சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் மீது கனரக வாகனங்கள் செல்லவதால் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.

மேலும், தார்சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, தண்ணீர் வெளியேறும் பகுதியில் சாலை பள்ளமாகி எந்த நேரமும் அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, தினமும் குடிநீர் வீணாகி வருவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில், தொடர்ச்சியாக குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவது தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. எனவே, இக்குடி நீர் திட்டப் பணிகளை தரமாக செய்து முடித்திட ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்திட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement