தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு

 

Advertisement

சென்னை, நவ. 5: தீபாவளி கொண்டாட்டத்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தீபாவளிக்கு அடுத்த நாளான கடந்த ஒன்றாம் தேதி 92.78 டன் பட்டாசு கழிவுகளும், அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 167.55 டன் பட்டாசு கழிவுகளும், நேற்று 146 டன் பட்டாசு கழிவுகள் கொண்டுவரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக நேற்றுமுன்தினம் மாலை நான்கு மணி விவரப்படி 406.55 மெட்ரிக் டன் எடை கொண்ட பட்டாசு கழிவுகள் கொண்டுவரப்பட்டு அழிக்கப்பட்டன.

நான்காவது நாளாக நேற்றும் லாரிகள் மூலம் பட்டாசு கழிவுகள் சென்னை மாநகராட்சியில் இருந்து கொண்டுவரப்பட்டு தொழிற்சாலையின் முன் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளது. இறுதி நாளான நேற்று சுமார் 50 முதல் 100 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் இந்த தொழிற்சாலையில் அப்புறப்படுத்த வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலையில் அப்புறப்படுத்தப்படும் பட்டாசு கழிவுகளால் காற்று மற்றும் நிலம் மாசுபடாத வகையில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை திடக்கழிவு மேலாண்மை துறை சென்னை கார்ப்பரேஷன் உதவி பொறியாளர் ராஜேஷ், தொழிற்சாலையின் பொது மேலாளர் ஸ்ரீதர் ரெட்டி, பொறுப்பு அதிகாரி சீனிவாச ரெட்டி மற்றும் மனித வள மேலாளர் விவேக் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

Advertisement

Related News