தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 3வது வார கடை ஞாயிறு விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

Advertisement

காஞ்சிபுரம், டிச.2: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நேற்று, கார்த்திகை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமையான பக்தர்கள் தலையில் மண்சட்டியில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு புது மண் சட்டியில் மாவிளக்கு மாவுபோல் வைத்து பின் அதன் நடுவில் அகல் தீபம் ஏற்றி வைத்து, பின் அதற்கு நைவேத்தியப் பொருள்கள் சமர்ப்பித்து, பின் தலையில் சுமந்துகொண்டு கோயிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தால் தலைவலி, காதுவலி கண்ணில் ஏற்படும் பிணிகள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, இந்த நோய் தீர வேண்டிக்கொண்டு நோய் குணமானவுடன் நேர்த்திக் கடனாக கார்த்திகை மாதம் கடைஞாயிறு தினத்தில் தலையில் மாவிளக்கு ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பெஞ்சல் புயல் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த வாரம் குறைவான அளவே பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். மேலும், கடைஞாயிறு விழாவுக்காக சாலையோரம் கடை வைத்திருந்த வியாபாரிகளின் வியாபாரமும் தொடர் மழையால் பாதித்தது.

Advertisement