தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவையில் 3 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி

 

Advertisement

புதுச்சேரி, டிச. 9: வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவையில் 3 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்தவர் விக்னேஷ் சுந்தர். இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி விக்னேஷ், மர்ம நபர் அனுப்பிய லிங்கில் ரூ.6.66 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்ததும், அதில் அவருக்கு கிடைத்த பணத்தை, அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. புதுவை வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இணையதளத்தில் கிப்ட் குறித்து விளம்பரம் பார்த்துள்ளார். இதனை நம்பி மர்ம நபரை தொடர்பு கொண்டு வேல்முருகன் பேசியுள்ளார். பின்னர் பார்சல் நிறுவனத்தில் இருந்த பேசுவதாக மர்ம நபர் கூறியுள்ளார்.

அப்போது தங்களது பார்சலை பெற முன்பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.4.87 லட்சத்தை மர்ம நபருக்கு அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவர், ரூ.27 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.11.80 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News