Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுவையில் 3 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி

புதுச்சேரி, டிச. 9: வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவையில் 3 பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்தவர் விக்னேஷ் சுந்தர். இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி விக்னேஷ், மர்ம நபர் அனுப்பிய லிங்கில் ரூ.6.66 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்ததும், அதில் அவருக்கு கிடைத்த பணத்தை, அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. புதுவை வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இணையதளத்தில் கிப்ட் குறித்து விளம்பரம் பார்த்துள்ளார். இதனை நம்பி மர்ம நபரை தொடர்பு கொண்டு வேல்முருகன் பேசியுள்ளார். பின்னர் பார்சல் நிறுவனத்தில் இருந்த பேசுவதாக மர்ம நபர் கூறியுள்ளார்.

அப்போது தங்களது பார்சலை பெற முன்பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.4.87 லட்சத்தை மர்ம நபருக்கு அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவர், ரூ.27 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.11.80 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.