தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மர்ம விலங்கு கடித்து 28 பன்றிகள் உயிரிழப்பு

மல்லசமுத்திரம், ஜூலை 5: மல்லசமுத்திரம் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 28 வளர்ப்பு வெண் பன்றிகள் உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே அத்தப்பம்பட்டி பூசாரிக்காட்டில் வசிப்பவர் சதீஷ்(47). விவசாயி. இவர் சொந்தமாக அரசு அனுமதி பெற்று, இவருடைய தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், 500க்கும் மேற்பட்ட வெண் பன்றிகள் வளர்ப்பை, கடந்த 2013ம் ஆண்டில் இருந்து தொழில்செய்து வருகிறார். இவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு அரசு நிறுவனத்திற்கு வெண்பன்றிகளை கிலோ ரூ.175 வீதம் விற்பனை செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் பராமரிப்பு பணிகளை முடித்து கொண்டு, வேலையாட்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். மாலை 5மணி அளவில் தோட்டத்தில் உள்ள பண்ணைக்கு திடீரென மர்ம விலங்கு புகுந்து, 28 வெண்பன்றிகளை கடித்து குதறியதில் பலியானது.

இதன் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்தனர். பின்னர் சதீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பன்றிகளை பரிசோதனை செய்தனர். இதையடுத்து அருகேயுள்ள தோட்டத்தில் குழி தோண்டி ஒரே இடத்தில் பன்றிகளை புதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினார்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்ப்பதற்கு மிகுந்த அச்சமாக உள்ளது. அருகில் புதர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே மர்ம விலங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

Related News