தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேச வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்திய 250 பேர் கைது

திருச்சி, டிச.5: வங்கதேச வன்முறையை கண்டித்து திருச்சியில் போராட்டம் நடத்திய 250 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். பாஜக நிர்வாகிகள் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை விளக்கி முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் திருமண மஹாலில் அடைத்தனர். அங்கு அரங்கு நிரம்பியதால் பாதிக்கும் மேற்பட்டோரை வேறு மண்டபத்துக்கு கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement