தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது

 

Advertisement

சிதம்பரம், ஜூலை 8: சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தம்பி பிள்ளை. இவரது மனைவி ரம்யா தேவி(42). இவர் அண்ணாமலை நகர் அருகே கடவாச்சேரி பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி கடவாச்சேரி பஸ் நிறுத்தம் அருகே பணி முடிந்து பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர்.

கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில், அண்ணாமலை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கல்பணா தலைமையில், சிதம்பரம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாபு, கோபி, தலைமை காவலர்கள் ராஜீவ் காந்தி, கணேசன், பாலாஜி, ஞானப்பிரகாசம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வந்தனர்.

மேலும் சைபர் கிரைம் தலைமை காவலர்கள் பாலமுருகன், பத்மநாபன் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.அதில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வடக்கு மாங்குடி இந்திரன் மகன் கோகுலேஷ்(22), கொரடாச்சேரி பெருமாளகரம்

கிலேரியோயோ கொல்லை பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் நிதீஷ்(20) ஆகிய 2 பேரும் ஆசிரியையிடம் தாலி செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோகுலேஷ், நிதீஷ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 9 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News