தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி அருகே சாயி லட்சுமி கணபதிக்கு 108 பால்குட அபிஷேகம்

 

Advertisement

திருத்தணி, அக். 7: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொன்பாடி கிராமத்திற்கு அருகில் ஸ்ரீசாயி லட்சுமி கணபதி கோயில் கட்டப்பட்டு சமீபத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைதொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில், இறுதிநாளான நேற்று லட்சுமி கணபதிக்கு 108 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கிராம பெண்கள் பங்கேற்ற 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

மேள தாளங்கள் முழங்க பெண்கள் கோயில் வந்தடைந்து கணபதிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசத்தால், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருத்தணி சுற்று வட்டார கிராமமக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு லட்சுமி கணபதி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை என்.எஸ்.பாபு நாயுடு மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Related News