பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது, இந்தியா, ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாக். பதில் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால், பாகிஸ்தான் அருகில் உள்ள இமாசலப்பிரதேசத்தின் தர்மசாலா நகரில் உள்ள ஸ்டேடியத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையே இன்றும், பஞ்சாப் – மும்பை அணிகள் இடையே, வரும் 11ம் தேதியும் நடக்கவுள்ள போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இருப்பினும், இதுவரை அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
தர்மசாலாவில் போட்டி நடக்குமா?
0