சென்னை: தலைநிமிர்ந்து உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கு தெரியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தினந்தோறும் மக்களை குழப்பும் வகையில் ஆளுநர் ஏதாவது ஒன்றை பேசி வருகிறார். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பது ஆளுநர் ரவிக்கு தெரியவில்லை. தொழில்துறை, மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.