டெல்லி: டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீர் தொட்டிகளில் அதிகளவு நீரை சேமித்து வைத்தாலும், வாகனங்களை கழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் கடும் வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement


