Friday, April 19, 2024
Home » டெல்லி அவசர சட்ட விவகாரம் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாடி ஆதரவு

டெல்லி அவசர சட்ட விவகாரம் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாடி ஆதரவு

by MuthuKumar

லக்னோ: டெல்லியில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று லக்னோ சென்ற கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர். பின்னர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், ‘’டெல்லி அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்த விவகாரத்தில் டெல்லி அரசுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிக்கும். பாஜ. அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்தால், இந்த அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிக்கலாம்,’’ என்று அகிலேஷ் கூறினார்.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi