மேட்டூர்: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 55,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பை விநாடிக்கு 55,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பும் அதிகரிக்கப்பட உள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் தற்போது 85,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்படுகிறது.,
கேஆர்எஸ் அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் திறக்க முடிவு
0