உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் சாவு: பெருங்குடலில் 5 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மீட்பு
கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த 17ம் தேதியன்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பது கோவை வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வனப்பணியாளர்கள் அந்த யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாய் யானை உடல்நலக் குறைவு காரணமாக தரையில் படுத்து விட்டது. இதனால், குட்டி யானை செய்வதறியாது பரிதவித்து நின்றது. 4 நாட்கள் சிகிச்சை அளித்தும், நேற்று முன்தினம் தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது.




