Saturday, July 19, 2025

கண் கருவளையம் மறைய!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

முகத்தின் ஒட்டு மொத்த அழகும் கண்களில்தான் இருக்கிறது. ஆனால், சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து முக அழகையே கெடுத்துவிடுகின்றன. கருவளையம் உண்டாக, தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவது காரணமாக இருக்கிறது. மேலும், மரபணு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல்வேறு காரணிகளாலும் கண் கருவளையம் ஏற்படலாம். இவற்றை வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

கண் கருவளையம் மறைய, தக்காளி சாறு, எலுமிச்சை சாறு, கற்றாழை ஜெல், உருளைக்கிழங்கு, காபித் தூள், வெள்ளரிக்காய், பாதாம் எண்ணெய் போன்ற வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.

விவரங்கள்

தக்காளிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு: தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

காபித் தூள்: காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து சீரத்தை கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெயை கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

குளிர்ந்த தேநீர் பைகள்: க்ரீன் டீ பேக்குகளை குளிர்சாதன பெட்டியில் ஆறி, கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் நீங்கும்.

ரோஸ்வாட்டர்: சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க ரோஸ்வாட்டர் உதவி செய்கிறது. இதற்கு, ரோஸ் வாட்டரை காட்டன் துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இதனை தினசரி தொடர்ந்து செய்து வர கருவளையம் நீங்கும்.இந்த வீட்டு வைத்தியங்கள் கருவளையத்தை மென்மையாக்க மற்றும் மங்கச் செய்ய உதவும்.

தொகுப்பு: ரிஷி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi