நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கப்
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 10 பல்
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு – 2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
வெல்லம் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலையை சேர்த்து 2-3 நிமிடம் ரோஸ்ட் செய்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, அரைத்த கறிவேப்பிலையை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து கிளறி, 10 நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.