சென்னை : கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம். வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன். த/பெ. சரவணன் (வயது 10) மற்றும் யோகேஸ்வரன், த/பெ.கணேஷ் (வயது 8) ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று (3-8-2023) மதியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கும் எனது பெற்றோர்களுக்கும் இரங்கலையும், அவர்களது ஆறுதலையும் ஆழ்ந்த தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .