கடலூர் : கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 42கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். முறையான இருக்கை வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.